பாலருவியில் எந்த வசதியுமில்லை... கூடுதல் கட்டணம் வசூலிப்பதா? கேரள வனத்துறைக்கு எதிராக போர்க்கொடி
செங்கோட்டை: பாலருவியில் எந்த வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காத கேரள வனத்துறையினர், கட்டணத்தை மட்டும் கூடுதலாக வசூலிப்பது ஏன் என்று வன பாதுகாப்பு சமிதி அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். சிறுவர்களுக்கும் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்தும் இந்த அமைப்பினர் பணிக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.

தமிழக கேரளா எல்லையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் செங்கோட்டை அருகே ஆரியங்காவு என்ற பகுதி உள்ளது. இவ்வூரில் இருந்து சுமார் 7கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பாலருவி. இந்த பாலருவிப் பகுதியை பராமரிக்கவும்,பாதுகாக்கவும்சில ஆண்டுகளுக்கு முன் கேரள வனத்துறை உள்ளூர் மக்களை கொண்டு "வனபாதுகாப்பு சமிதி" என்ற அமைப்பை ஏற்படுத்தியது. இந்த அமைப்பில் 250பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இவர்களில் ஆண்டுக்கொருமுறை 30பேர்களைத் தேர்ந்தேடுத்து அவர்களை இந்த பாலருவிப் பகுதியையும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்களையும் கவனிக்க தேர்ந்தெடுப்பது வழக்கம்,இந்த ஆண்டு ஒரு குழுவை ஏற்படுத்தினர். அதன்படி இந்தக்குழுவினர் கடந்த மாதம் பொறுப்பேற்றனர். அதில் தலைவர்,துணைத்தலைவர்,பொருளாளர் ஆகிய பதவிகள் மக்களுக்கும்,செயலாளர் பதவி வனத்துறை அதிகரிக்கும் வழங்கப்படுவது வழக்கம் ஆனால் இந்த முறை அப்படி பொறுப்புக்கள் வழங்கப்படவில்லை.

குற்றாலம் வரும் தமிழக சுற்றுலாப் பயணிகள் இந்த அருவிக்கும் திரண்டு வருவது வழக்கம்,இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உடைமாற்றும் வசதி,கழிப்பிட வசதி,வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இன்றி,குளிக்க வருபவர்களிடம் ஒரு நபருக்கு கட்டணமாக முன்னர் ரூபாய் 15வசூலிக்கப்பட்டது. தற்போது அந்த கட்டணம் ரூபாய் 30ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

13வயதுக்குட்பட்ட சிறுவர்,சிறுமிகளுக்கு கட்டணம் கிடையாது. தற்போது அவர்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்தும் வனப்பாதுகாப்பு சமிதி அமைப்பினர் இன்று அருவிக்கு செல்லும் பாதையின் முகப்பு பகுதியில் பணிக்கு செல்லாமல் புறக்கணித்தனர். கேரள வனத்துறையைக் கண்டித்து -வன பாதுக்காப்பு அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளதால் அங்கு பரப்பரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications