புலவர் பழனிச்சாமிக்கு மொத்தம் 940 வருட சிறை.. ஆயுள் முழுக்க சிறையில் கழிக்கும் நிலை!
தஞ்சாவூர்: கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கூட தீவிபத்தில் அதன் நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்குத்தான் அதிக அளவிலான சிறைத் தண்டனை கிடைத்துள்ளது.
அவருக்கு ஆயுள் தண்டனை போக மொத்தம் 940 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார் தஞ்சாவூர் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி முகம்மது அலி. இந்த தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். அதாவது ஆயுள் காலம் முழுவதும் அவர் சிறையில் இருக்க நேரிடும்.
94 குழந்தைகள் பலியான கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து வழக்கில், தஞ்சை கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

10 வருடத்திற்குப் பிறகு
சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

11 பேர் விடுதலை
மொத்தம் குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் பழனிச்சாமி உள்பட 10 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

பழனிச்சாமிக்குத்தான் அதிக தண்டனை
பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை, ஒரு குழந்தைக்கு 10 ஆண்டு வீதம் பலியான 94 குழந்தைகளுக்கும் சேர்த்து மொத்தம் 940 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.51 லட்சத்து 65 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது. 10 பேரில் இவருக்குத்தான் அதிக அளவிலான தண்டனை கிடைத்துள்ளது.

ஆயுள் முழுவதும் சிறைதான்
இந்தத் தண்டனையை பழனிச்சாமி ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அவர் ஆயுள் தண்டனைக் கைதியாக கருதப்படுவார். தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளை குறித்த காலத்திற்குப் பின்னர் விடுவிக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications