தமிழக மீனவர்கள் 13 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு
மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று சிறை பிடித்துச் சென்றனர்.
Recommended Video

ராமநாதபுரம்: நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேருக்கு நவம்பர் 16 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது . ராமநாதபுரம், ஜெகதாப்பட்டினம் மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள், அவர்களது இரு விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களையும் அவர்களது ஒரு படகினையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டனர்.
மீனவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அனைவரையும் 16ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அனைவரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் செல்லும் நடவடிக்கை அன்றாடம் தொடர்ந்து நடந்துவருகின்றன. கடந்த வாரம் வரை 54 மீனவர்கள் இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அக்டோபர் 8ல் கைதான 10 காரைக்கால் மீனவர்களின் காவல் நவம்பர் 16 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 140-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 2 நாள்களுக்கு முன் முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications