ஜெ. மரணத்திற்கு விசாரணை கமிஷன்- அரசியல் தலைவர்களின் ஆதரவும் எதிர்ப்பும்
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அதேபோல ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்ட இல்லமான வேதா நிலையத்தினை நினைவிடமாக மாற்றவும் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

தமிழிசை வரவேற்பு
முதல்வரின் நீதி விசாரணை அறிவிப்பை வரவேற்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்குவதும் வரவேற்க வேண்டிய அறிவிப்புதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாஜக அழுத்தம்
பாஜக அழுத்தத்தால் தான் முதல்வர் பழனிசாமி, இந்த இரண்டு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். முதல்வரின் அனைத்து செயல்படுகளுக்கு பின்னாலும் பாஜகவின் அழுத்தம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

8 மாதம் கழித்து ஏன் அறிவிப்பு
ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணை தேவையில்லை என்று கூறியவர்களே இப்போது விசாரணை தேவை என்று கூறியுள்ளது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் டிகேஎஸ் இளங்கோவன். சசிகலா குடும்பத்தினரை அரசியலை விட்டு ஒதுக்கவே இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக கூறியுள்ளார்.

தம்பித்துரை வரவேற்பு
கருத்து வேறுபாடுகளை மறந்து அதிமுக நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என தம்பிதுரை கூறியுள்ளார். சந்தேகத்தை களைவதற்காக நீதிவிசாரணை அறிவித்து இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. முதல்வரின் இரு அறிவிப்புகளும் வரவேற்க வேண்டிய விஷயம் தான். ஓ. பன்னீர் செல்வம் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

திருநாவுக்கரசர் வரவேற்பு
ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை வரவேற்பதாக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். நீதி விசாரணை நடத்தினால் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தீர்ந்து விடும் என்றும் கூறியுள்ளார்.

திருமாவளவன் கருத்து
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த கருத்து வரவேற்க வேண்டிய விசயமே என்று விசிக கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை, வேதா நிலையம் அரசுடமையாக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்றுள்ளார் திருமாவளவன்.

நீதி விசாரணை எப்போது
ஜெயலலிதா வாழ்ந்த வீடு எத்தனை நாட்களில் நினைவு இல்லம் ஆக்கப்படும் என ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் டி.டி.வி. தினகரனுடன் மோதல் ஏற்பட்ட பிறகுதான் நீதி விசாரணையை முதல்வர் அறிவிக்கிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications