ஜெயங்கொண்டம் அருகே ஓ.என்.ஜி.சி எண்ணெய்க் குழாயில் திடீர் கசிவு!
அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமான எண்ணெய்க் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமான எண்ணெய்க் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.
குருவாலப்பர் கிராமத்தில் பதிக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி பரிசோதனைக் குழாயில் எண்ணெய், வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் விழப்பள்ளம், சோழங்குறிச்சி பகுதிகளின் குழாயில் கசிவு ஏற்பட்டது.
முன்னதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் கடந்த 22 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.