பஸ் ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்காதது ஏன்?... அரசுக்கு ஹைகோர்ட் சுளீர்!
போக்குவரத்து ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை வழங்காதது ஏன் என்று அரசுக்கு ஹைகோர்ட் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.
Recommended Video

சென்னை : போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்காதது ஏன் என்ற அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளது. போக்குவரத்து கழகங்களை கலைத்துவிட்டு தனியார்மயாமாக்கலாமே? என்று நீதிமன்றம் அரசுக்கு கேள்வியை எழுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற வரும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் முன் அறிவிப்பு செய்தே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். மேலும் ஊழியர்களின் ஓய்வூதியம் அளிக்கப்படாமல் பல ஆண்டுகளாக நிலுவைத் தொகை இருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளன.

இதனையடுத்து அரசுக்கு பல்வேறு கேள்விகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியுள்ளது. தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்காமல் இழுத்தடிப்பு செய்தது ஏன். உடனடியாக ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை அரசு வழங்க வேண்டும். இதற்கு நிலுவைத் தொகை படிப்படியாக வழங்கப்பட்டு வருவதாக அரசு பதில் அளித்துள்ளது.
ஓய்வூதியத்தை ஏன் இத்தனை ஆண்டுகளாக வழங்கவில்லை, போக்குவரத்து கழகத்தை லாபத்தில் செயல்படுத்த முடியாவிட்டால் தனியார்மயமாக்கிவிடலாமா என்று நீதிபதிகள் அரசுக்கு கேள்வி எழுப்பினர். இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை பிற்பகலுக்கு ஒத்திவைத்துள்ளனர்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications