பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: திராவிடர் விடுதலை கழகத்தினர் மீதான தே.பா. சட்டம் ரத்து!
சென்னை: சென்னையில் தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பான வழக்கில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை எதிர்த்து மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளி தபால் நிலையங்களில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த உமாபதி, ராவணன், மனோகரன் மற்றும் மாரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவர் மீதும் நவம்பர் மாதம் 1-ந் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை மாநகர போலீஸ் ஆணையர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் வி.தனபாலன், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.

விசாரணைக்குப் பிறகு திராவிடர் விடுதலைக் கழகத்தினர் 4 பேர் மீது பதிவு செய்யப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உற்சாக வரவேற்பு
இதைத் தொடர்ந்து சென்னை புழல் சிறையில் இருந்து உமாபதி உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் 4 பேருக்கும் சென்னை ராயப்பேட்டை பகுதியில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலை கழகத்தின் தமிழக பொதுச்செயலர் விடுதலை க. ராசேந்திரன், திராவிடர் விடுதலை கழகத்தின் புதுச்சேரி தலைவர் லோகு அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications