பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: திராவிடர் விடுதலை கழகத்தினர் மீதான தே.பா. சட்டம் ரத்து!
சென்னை: சென்னையில் தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பான வழக்கில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை எதிர்த்து மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளி தபால் நிலையங்களில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த உமாபதி, ராவணன், மனோகரன் மற்றும் மாரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவர் மீதும் நவம்பர் மாதம் 1-ந் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை மாநகர போலீஸ் ஆணையர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் வி.தனபாலன், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.

விசாரணைக்குப் பிறகு திராவிடர் விடுதலைக் கழகத்தினர் 4 பேர் மீது பதிவு செய்யப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உற்சாக வரவேற்பு
இதைத் தொடர்ந்து சென்னை புழல் சிறையில் இருந்து உமாபதி உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் 4 பேருக்கும் சென்னை ராயப்பேட்டை பகுதியில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலை கழகத்தின் தமிழக பொதுச்செயலர் விடுதலை க. ராசேந்திரன், திராவிடர் விடுதலை கழகத்தின் புதுச்சேரி தலைவர் லோகு அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications