13 வயதில் திருமணம்– 21 வயதில் விவாகரத்து: மதுரையில் பரபரப்பு
மதுரை: மதுரையில் 8 வருடங்களுக்கு முன்பு திருமணமான 13 வயது பெண்ணுக்கு 21 வயதில் விவாகரத்து வழங்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவர் தன்னுடைய தாய்மாமனையே மணம் புரிந்துள்ளார். இந்நிலையில் கீதா மதுரை குடும்பநலக் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதன்படி தன்னுடைய தாய்மாமனான ராமகிருஷ்ணன் என்பவருக்கும், தனக்கும் 2006 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 13 வயதிலேயே தன்னுடைய கல்யாணம் நடந்து விட்டது.
தன்னுடைய கணவர் குடிப்பழக்கம் மற்றும் கஞ்சா பழக்கம் மற்றும் வேறொரு பெண்ணுடன் தொடர்பு என்று இருந்தார். இதனால் தன்னைக் கொடுமைப்படுத்தி, அடித்து உதைத்து வருகிறார். எனது கணவனிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்ச்செல்வி, 13 வயது என்பது திருமணத்திற்கு உகந்த வயதல்ல. மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள கீதா, பொறுக்க முடியாமல்தான் விவாகரத்து கூறியுள்ளார். மேலும்,எல்லா சாட்சிகளுக்கும் கீதாவிற்கு சாதகமாக உள்ளது.
பெற்றோரின் வற்புறுத்தலுக்காக நடைபெற்றது இத்திருமணம். எனவே, கீதாவிற்கு விவாகரத்து வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார்.