மரிக்காத மனிதம்.. வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 20,000 வழங்கிய போஸ்ட்மார்ட்டம் செய்யும் ஊழியர்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மனிதர்கள் மரிக்கலாம்.. ஆனால் மனிதம் மரிக்காது என்பதற்கு இதோ இன்னும் ஒரு உதாரணம். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனையின்போது உடல்களை அறுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர் ஒருவர் தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு தனது சொந்தக் காசு ரூ. 20,000 பணத்தை கொடுத்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிணம் பரிசோதனை செய்யும் ஊழியர் விஜயன். இவர் தனது 1 மாத சம்பளம் ரூ. 13,000 மற்றும் வீட்டில் வைத்திருந்த 7000 ஆக மொத்தம் 20 ஆயிரத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார்.
வெள்ள நிவாரணத்தில் கை வைத்து துயரத்தில் ஆதாயம் பார்க்கும் சில மனிதப் பிணங்களுக்கு மத்தியில், பிணம் அறுக்கும் தொழிலாளியின் இந்த உதவி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
படம்: வாட்ஸ் ஆப்












Click it and Unblock the Notifications