பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம்: விசாரணை குழுவை திடீரென வாபஸ் பெற்ற காமராஜர் பல்கலைக்கழகம்
பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் அமைக்கப்பட்ட ஐவர் குழுவை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் திடீரென வாபஸ் பெற்றுவிட்டது.
Recommended Video

சென்னை: பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் அமைக்கப்பட்ட ஐவர் குழுவை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் திடீரென வாபஸ் பெற்றுவிட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள உயரதிகாரிகளின் காமஇச்சையை தீர்த்துக் கொள்ள அவரிடம் பயிலும் மாணவிகளை அணுகினார்.
இதுதொடர்பான ஆடியோ காட்சி ஆதாரத்துடன் மாணவிகள் நிர்மலா மீது கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் அவர் 15 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கல்லூரி நிர்வாகம்
இந்நிலையில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற நிர்மலாவை கைது செய்ய வேண்டும் என்று கல்லூரி முன்பு மாணவர்களும், மாதர் சங்கத்தினரும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் நிர்மலா மீது கல்லூரி நிர்வாகம் புகார் கொடுத்தது.

5 பேர் கொண்ட குழு
நிர்மலா ஆடியோவில் குறிப்பிட்டிருந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்லதுரை உத்தரவின்பேரில் நிர்மலா குற்றம்சாட்டும் விவகாரம் குறித்து கணிதத் துறை தலைவர் லெல்லிஸ் திவாகரன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

நிர்மலா தேவி கைது
இந்த புகாரின் பேரில் அவரிடம் விசாரணை நடத்த போலீஸார் சென்ற போது வீட்டுக்குள் உள்பக்கமாக பூட்டிக் கொண்டு நிர்மலா வெளியே வர மறுத்துவிட்டார். இதையடுத்து உறவினர்கள் முன்னிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு அவரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.

குற்றவாளிகள் தப்ப முடியாது
இதையடுத்து நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான விசாரணை ஆணையத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்து உத்தரவிட்டார். மேலும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஐவர் குழு வாபஸ்
இந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலாலுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்ல துரை சந்தித்தார். அப்போது விசாரணை அதிகாரியை ஆளுநரே நியமித்துள்ள நிலையில் பல்கலை சார்பில் நியமிக்கப்பட்ட ஐவர் குழுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்துக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் ஆளுநரிடம் செல்லதுரை உறுதியளித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications