பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம்: விசாரணை குழுவை திடீரென வாபஸ் பெற்ற காமராஜர் பல்கலைக்கழகம்
பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் அமைக்கப்பட்ட ஐவர் குழுவை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் திடீரென வாபஸ் பெற்றுவிட்டது.
Recommended Video

சென்னை: பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் அமைக்கப்பட்ட ஐவர் குழுவை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் திடீரென வாபஸ் பெற்றுவிட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள உயரதிகாரிகளின் காமஇச்சையை தீர்த்துக் கொள்ள அவரிடம் பயிலும் மாணவிகளை அணுகினார்.
இதுதொடர்பான ஆடியோ காட்சி ஆதாரத்துடன் மாணவிகள் நிர்மலா மீது கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் அவர் 15 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கல்லூரி நிர்வாகம்
இந்நிலையில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற நிர்மலாவை கைது செய்ய வேண்டும் என்று கல்லூரி முன்பு மாணவர்களும், மாதர் சங்கத்தினரும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் நிர்மலா மீது கல்லூரி நிர்வாகம் புகார் கொடுத்தது.

5 பேர் கொண்ட குழு
நிர்மலா ஆடியோவில் குறிப்பிட்டிருந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்லதுரை உத்தரவின்பேரில் நிர்மலா குற்றம்சாட்டும் விவகாரம் குறித்து கணிதத் துறை தலைவர் லெல்லிஸ் திவாகரன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

நிர்மலா தேவி கைது
இந்த புகாரின் பேரில் அவரிடம் விசாரணை நடத்த போலீஸார் சென்ற போது வீட்டுக்குள் உள்பக்கமாக பூட்டிக் கொண்டு நிர்மலா வெளியே வர மறுத்துவிட்டார். இதையடுத்து உறவினர்கள் முன்னிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு அவரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.

குற்றவாளிகள் தப்ப முடியாது
இதையடுத்து நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான விசாரணை ஆணையத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்து உத்தரவிட்டார். மேலும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஐவர் குழு வாபஸ்
இந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலாலுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்ல துரை சந்தித்தார். அப்போது விசாரணை அதிகாரியை ஆளுநரே நியமித்துள்ள நிலையில் பல்கலை சார்பில் நியமிக்கப்பட்ட ஐவர் குழுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்துக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் ஆளுநரிடம் செல்லதுரை உறுதியளித்துள்ளார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications