4 ஆண்டுகளுக்குப் பின்னர் நிரம்பியது மதுராந்தகம் ஏரி... மகிழ்ச்சியில் 10 கிராம விவசாயிகள்
மதுராந்தகம்: பெய்து வருகின்ற பேய் மழைக்கு மதுராந்தகம் பெரிய ஏரி நிரம்பி வழிகின்றது. இதனால் பத்து கிராம விவசாயிகள்மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் 912 ஏரிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள மானம்பதி ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி, தாம்பரம் பெரிய ஏரி, கடப்பேரி, செம்பாக்கம் ஏரி, வேளச்சேரி, சேலையூர் ஏரிகள் உள்பட 97 ஏரிகள் நிரம்பி உள்ளன. மற்ற ஏரி, குளங்களும் வேகமாக நிரம்பி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி நிரம்பி உள்ளது. தற்போது நீர்மட்டம் 22.4 அடி ஆக உள்ளது. நேற்று காலை முதல் இரவு வரை ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே இன்று அல்லது நாளைக்குள் ஏரியில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 700 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 660 மில்லியன் கனஅடி தண்ணீர் ஏரியில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் சுற்றியுள்ள 10 கிராமங்களை சேர்ந்த 2753 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். ஏரியில் நீர் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, "மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. ஏரியில் உள்ள 5 மதகுகளும், கரைகளும் பாதுகாப்புடன் நல்ல நிலையில் உள்ளன. வருவாய்த்துறையினருடன் இணைந்து ஏரியை கண்காணித்து வருகிறோம்" என்றார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications