போராட்டத்தை திரும்ப பெறாத மருத்துவர்கள் சங்கங்கள் மீது நடவடிக்கை எடுங்க - ஹைகோர்ட் ஆணை
போராட்டத்தை திரும்பப்பெறாத மருத்துவர் சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
சென்னை: போராட்டத்தை திரும்பப்பெறாத மருத்துவர் சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும், முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன்காரணமாக, தமிழகம் முழுவதும் நோயாளிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

போராட்டம் நடத்திய மருத்துவ சங்கப் பிரதிநிதிகள் உடன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பேரில், அரசு மருத்துவ சங்கத்தினர் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.
இதேபோன்று, கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், மாணவர்களும் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். ஆனால், இதர மருத்துவ சங்கங்கள் தொடர்ந்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், தொடர் போராட்டம் நடத்தும் மருத்துவ சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, போராட்டம் நடத்தும் மருத்துவ ஊழியர் சங்கத்தினர் மீது எஸ்மா சட்டம் பிரயோகிக்கும்படி உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications