செங்கல்பட்டு அருகே 4 பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து- பெண் பலி, 50 பேர் காயம்
செங்கல்பட்டு அருகே புறவழிச்சாலையில் 4 அரசுப் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே புறவழிச்சாலையில் 4 அரசுப் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் ஒரு பெண் உயிரிழந்தார். 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சென்னை - செங்கல்பட்டு இடையே போக்குவரத்து முடங்கியது.
ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தொடர் அரசு விடுமுறையால் சொந்த ஊருக்கு செல்ல பலர் நேற்று மதியம் முதலே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிய தொடங்கினர். விடுமுறை கால கூட்டத்தை சமாளிக்க அரசு சார்பில் 700 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

அரசு சார்பில் இன்று காலை முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் கிடைக்கும் பேருந்துகளில் ஏறி சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.
4 நாட்கள் தொடர் விடுமுறை அடுத்து சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு, மதுரவாயல், அரும்பாக்கம், திருமங்கலம், அண்ணா நகர் ஆகிய இடங்களில் நெரிசல் ஏற்பட்டது. கோயம்பேட்டிலிருந்து பல பேருந்துகள் வெளியூருக்குச் செல்லும் நிலையில் நெரிசல் ஏற்பட்டது.
வெளியூர் செல்லும் பயணிகளால் 100 அடி சாலை, பூந்த மல்லிசாலை, ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து அதிகரித்து காணப்படும். போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பஸ் ஸ்டாண்ட், விமான நிலையம் செல்பவர்கள் முன்னதாகவே செல்ல வேண்டும் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.
நேற்று மாலை செங்கல்பட்டு புறவழிச் சாலையில் சென்ற அரசு பேருந்துகள் திடீரென ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஒரு பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இதில் சிக்கி ஒரு பெண் பலியானார். மேலும், பேருந்துகள் அடுத்தடுத்து மோதி கொண்டதால் 50 பேர் காயம் காயமடைந்தனர். இந்த விபத்தால் செங்கல்பட்டு புறவழிச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications