தடையை மீறி நீட் தேர்வுக்கு எதிராக போராடிய வைகோ கைது - வீடியோ
சென்னை:நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி மதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் வைகோ கைது செய்யப்பட்டார்.
நீட் தேர்வு பிரச்சனையில் இதுவரை நிரந்தத தீர்வு காணப்படவில்லை. அதனால், தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஆகஸ்டு மாதத்தில் இரண்டு வாரங்கள் ஓடியும் இன்னும் நடைபெறவில்லை.

இந்நிலையில், மதிமுக நீட் தேர்வில் தமிழக மணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கூறி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் போரட்டத்துக்கு காவல்துறை அனுமதியளிக்கவில்லை.
அதனையடுத்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது. அதில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். தடையை மீறி போராட்டம் நடத்தியதால் வைகோ உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications