மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி இன்னும் ஒரு வாரத்தில் தொடக்கம்- தமிழக அரசு
இன்னும் ஒரு வாரம் அல்லது அதிகபட்சம் 10 நாள்களுக்குள் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை: நீட் தேர்வு முடிவுகள் வெளியிட விதிக்கப்பட்ட தடை நீங்கியதால் இன்னும் ஒரு வாரத்தில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு ஒரே மாதிரியான சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதால் தேசிய தகுதிகாண தேர்வு எனப்படும் நீட் தேர்வை இந்த ஆண்டில் மத்திய அரசு கட்டாயமாக்கியது.

இதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவையில் 88,000 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். ஒரு சிலர் மெட்ரிக் பாடத்திட்டம்தான் கேட்கப்பட்டது எனவும், ஒரு சிலர் சிபிஎஸ்இ பாடதிட்ட கேள்விகள்தான் கேட்கப்பட்டனா என்றும் தெரிவித்தனர்.
இதனிடையே ஜூன் 8-ஆம் தேதி வெளியிட வேண்டிய தேர்வு முடிவுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை விதித்தது. இதனிடையே பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கும் பணிகள் தொடங்கியது.
ஆனால் நீட் தேர்வு குறித்த வழக்கு நிலுவையில் இருந்ததால் மருத்துவம், பல் மருத்துவத்துக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நீட் முடிவுகளுக்கு தடை விதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி சிபிஎஸ்இ வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அந்த வழக்கை அவசர வழக்காக இன்று உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை விதித்த தடை உத்தரவை உச்சநீதிமன்றம் நீக்கியது. மேலும் தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதியை சிபிஎஸ்இ வாரியமே முடிவு செய்யலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை தொடர்ந்து இன்னும் ஒரு வாரத்தில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்தது. அதிகபட்சம் 10 தினங்களுக்குள் இந்த பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications