ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்- வேளாங்கண்ணி உள்ளிட்ட தேவாலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனை!
வேளாங்கண்ணி: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் தவ காலத்தில் பெரிய வியாழன், புனித வெள்ளியைத் தொடர்ந்து ஈஸ்டர் பண்டிகை இன்று கடைபிடிக்கப்படுகிறது. இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டதன் பின்னர் 3-ம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பது இறைநம்பிக்கை. இதனடிப்படையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். நள்ளிரவில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெற்றன. சென்னை சாந்தோம் தேவாலயம், சென்னை பெசன்ட் நகர் தேவாலயம், வேளாங்கண்ணி தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு பிரார்த்தனைகளில் பங்கேற்றனர். இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இந்தப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. சில தேவாலயங்களில் அதிகாலை 4 மணி வரை சிறப்பு பிரார்த்தனை நிகழ்வுகள் நடந்தன.
திருப்பலியில் பூசிக்கப்பட்ட தீர்த்தம் தெளிக்கப்பட்டு அருளாசி வழங்கப்பட்டது. தேவாலயங்களில் இயேசு பிரான் உயிர்த்தெழும் நிகழ்வு விளக்குகளாலும் நாடகங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தப்பட்டன. அப்போது தேவாலயங்களில் இனிப்புகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்கள் வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
#WATCH | Tamil Nadu: Midnight #Easter prayers were held at Velankanni Church in Nagapattinam. #Easter2024 pic.twitter.com/JYAG232rOm
— ANI (@ANI) March 30, 2024
முன்னதாக தலைவர்கள் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்திருந்த ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி: மூப்பர்களாலும், வேத பாலகர்களாலும் பழி தூற்றப்பட்ட இயேசு, தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்து சபையில் நிறுத்தப்பட்டார். சதிகாரர்களின் காட்டுக் கூச்சலால் வேறு வழி இன்றி, இயேசுவை சிலுவையில் அறையுமாறு ஒப்புக் கொடுத்தான்.
இயேசுவின் தலையில் முள்முடி சூட்டி, முகத்தில் காரித்துப்பி, கன்னத்தில் அறைந்து, வாரினால் அடித்துச் சித்திரவதை செய்தனர். கபாலஸ்தலம் எனும் கொல்கொதாவில், சிலுவையில் அறையப்பட்ட இரண்டு கள்வர்களுக்கு நடுவே, அவரும் சிலுவையில் அறையப்பட்டார்.
'தேவாலயத்தை இடித்து மூன்று நாளுக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே இரட்சித்துக் கொள்' என்று நிந்தித்தனர்.
இருளைக் கிழித்து ஒளி எழுதல் போல, ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று, சிலுவையில் அறையப்பட்டு, இரத்தம் சிந்திய கிறிஸ்து இயேசுநாதர், மனிதகுலத்தின் அவலத்தைப் போக்க மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த உன்னதத்தை, ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள் கொண்டாடுகின்றனர். இயேசு உயிர்த்தெழுந்தார், துக்கத்தில் இருந்து உலகம் மீண்டது. கொடுந்துயரில் தவிப்பவர்களுக்கும், மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுக்குண்டவர்களுக்கும், விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை அவர்களது மனங்களில் ஈஸ்டர் வழங்குகிறது.
கூட்டாட்சித் தத்துவம் வெற்றிபெறவும், மாநில சுயாட்சி மலரவும், சனாதன இந்துத்துவா சக்திகளின் முயற்சிகளை முறியடிக்கவும் இந்நாளில் சபதம் ஏற்போம். மரண பயங்கரத்துக்கு ஆளாகி, துயர இருளிலும், கண்ணீரிலும், துடிதுடித்து வாடும் ஈழத்தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்கும்; விடியல் உதிக்கும். அதற்காக இந்த ஈஸ்டர் திருநாளில், தமிழ்க்குலம் உறுதி எடுக்கட்டும். கருணையைப் போற்றும் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு வைகோ தெரிவித்திருந்தார்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications