கட்சியை வழிநடத்த குழு அமைக்கப்படும்: ஜெயக்குமார் அறிவிப்பு!
கட்சியை வழிநடத்த குழு அமைக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: கட்சியை வழிநடத்த குழு அமைக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கட்சி மற்றும் ஆட்சியிலிருந்து சசிகலா குடும்பத்தை ஒதுக்குவதாக அறிவித்தப்பின் அமைச்சர் ஜெயக்குமார் இதனை தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தன்னை அதிமுக பொதுச்செயலாளராக நியமித்துக் கொண்ட சசிகலா கட்சியை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து ஆட்சியை கைப்பற்ற முயன்ற அவர், குடும்பத்தினரின் உதவியுடன் அப்போதைய முதல்வர் ஓபிஎஸை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்.
இதைத்தொடர்ந்து முதல்வராக பதவியேற்கவும் நாள் குறித்தார் சசிகலா. ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இடிப்போல் விழுந்து சசிகலாவின் கனவை சுக்குநூறாக உடைத்தது.

எடப்பாடி தலைமையில் ஆட்சி
இதையடுத்து பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. பின்னர் அதிமுக எம்எல்ஏக்களின் ஒத்துழைப்பால் சசிகலா தரப்பின் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஆட்சியமைத்தது.

ஒட்டுமொத்தமாக ஒதுக்குவதாக
இதைத்தொடர்ந்து ஆட்சியிலும் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் தலைவிரித்தாடியாது. சசிகலாவால் துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் சசிகலா குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக ஒதுக்குவதாக எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.

புதியக்குழு அமைக்கப்படும்
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த முடிவு தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் நீக்கப்பட்டதால் கட்சி நிர்வாககத்தை கவனிக்க குழுஅமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக்குழு கட்சியை வழிநடத்தும் என்றும அவர் கூறியுள்ளார்.

அனைவரின் விருப்பம்
ஒற்றுமையாக கட்சியயை வழிநடத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி அரசின் இந்த முடிவால் கட்சியிலும் ஆட்சியிலும் இனி சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இருக்காது என தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications