ப்ளஸ் 2 தேர்வுகள் தொடக்கம்.. எழும்பூர் அரசுப்பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு
ப்ளஸ் 2 தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் எழும்பூர் அரசுப்பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.
சென்னை: பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் எழும்பூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். அப்போது தமிழ் உட்பட 10 மொழிகளில் மாணவர்கள் தேர்வு எழுதுவதாக அவர் தெரிவித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கின. இதனையொட்டி எழும்பூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா ஆய்வு செய்தனர்.

அப்போது தேர்வு எழுதும் மாணவர்களை அவர் நேரில் பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அவர் கூறினார். ஊக்கத் தொகை வழங்குவதால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் படிக்கின்றனர் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ப்ளஸ் 2 தேர்வை தமிழ் உட்பட 10 மொழிகளில் மாணவர்கள் எழுதுவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அமைச்சர் ஆய்வின் போது சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களும் உடனிருந்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications