தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலமாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெகு தொலைவில் உள்ளதால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அவர் கூறினார்.
தமிழகத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 7 செமீ மழை பெய்துள்ளது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கியது. ஆரம்பமே அமர்களமாக இருந்தது. அடுத்தடுத்து கொட்டித்தீர்த்த மழையால் புறநகர்கள் வெள்ளக்காடாகின. பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிக்கு ஆளாகினர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பல ஏரிகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களாக லேசான சாரல் மழையாக மட்டுமே பெய்து வருகிறது. இதற்கு காரணம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து விட்டதே. எனவே இப்போதைக்கு பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றே வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications