விஷ்ணுப்பிரியா வழக்கு: தலைமைச்செயலர், உள்துறைச் செயளர், டிஜிபி பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: விஷ்ணுபிரியா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரி தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச் செயலாளர் 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டனர். மேலும் உள்துறை செயலர் மற்றும் டிஜிபியும் பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டிஎஸ்பி-யாகப் பணிபுரிந்துவந்த விஷ்ணுப்பிரியா, சில மாதங்களுக்குமுன் தனது அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையில், உயர் அதிகாரியின் அழுத்தம்தான் இந்த தற்கொலைக்குக் காரணம் என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டினார். இந்த வழக்கு, காவல் துறையிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

விஷ்ணுப்பிரியாவின் உயர் அதிகாரியான நாமக்கல் எஸ்.பி.செந்தில்குமார் உட்பட 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், வழக்கு விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததையடுத்து, விஷ்ணுப்பிரியாவின் தந்தை ரவி சிபிஐ விசாரணைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது அமர்வு நீதிமன்றத்தில் தனது மகளின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி அவர் மீண்டும் கடந்த பிப்ரவரி 10ம் தேதி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், இந்த வழக்கில் மாவட்ட எஸ்.பி. டிஐஜி மற்றும் டிஜிபி அலுவலகத்திலுள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியோரின் தலையீடு உள்ளதாகவும், எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அக்னி கோத்திரி மற்றும் வேணுகோபால் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 16ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில் இது குறித்த விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோர் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே இந்த வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தலைமைச் செயலாளர் 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டனர். மேலும் உள்துறை செயலர் மற்றும் டிஜிபியும் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடந்த முறையே பதில் மனு தாக்கல் செய்யாததால் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications