கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை, உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்தே போட்டி.. சீமான்
திருச்சி: உள்ளாட்சித் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து வரும் லோக்சபா தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
திருச்சி ரோசன் திருமண அரங்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், சட்டசபைத் தேர்தலைப் போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என்றார்.
அவரது பேட்டியிலிருந்து...

தனித்தே போட்டியிடுவோம்
உள்ளாட்சித் தேர்தலிலும் அடுத்து வரும் லோக்சபா தேர்தலிலும் அனைத்து இடங்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாங்கள் போட்டியிடுவோம். பஞ்சாயத்து உறுப்பினர் பதவியிலிருந்து மேயர் பதவி வரை அனைத்து இடங்களுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவோம்.

பாதிக்குப் பாதி பெண் வேட்பாளர்கள்
அதேபோல லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம். இதில் 20 இடங்களில் பெண்கள் நிறுத்தப்படுவர். 20 இடங்களில் ஆண் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவர்.

கூட்டணியே கிடையாது
ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. தனித்தே போட்டியிடுவோம். சட்டசபைத் தேர்தலில் நாங்கள் தோல்வி அடைந்திருந்தாலும் கூட 4.5 லட்சம் மக்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இது மிகப் பெரிய விஷயம். நல்லாட்சி மலர, வெளிப்படையான, ஊழலற்ற அரசு அமைய தொடர்ந்து பாடுபடுவோம்.

பணம் விளையாடி விட்டது
மாற்று அரசியல் சக்திகளை மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்ற கருத்தை நான் நிராகரிக்கிறேன். இரு முக்கிய திராவிடக் கட்சிகளை மட்டுமே மக்கள் விரும்புகின்றனர் என்று சொல்வதையும் நான் ஏற்க மாட்டேன். பணம் விளையாடி விட்டது. இந்தத் தேர்தலில் ஈடுபட்ட அனைவருக்கும் இது தெரியும்.

தவறி விட்டது தேர்தல் ஆணையம்
பண பலத்தால்தான் மற்ற அனைவரும் வீழ்த்தப்பட்டுள்ளனர். பண விநியோகத்தைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டது தேர்தல் ஆணையம். அது சரியாக செயல்பட்டிருந்தால் இதைத் தடுத்திருக்கலாம்.

பெரிய சக்தியாக உருவெடுப்போம்
எங்களது இலக்கு அடுத்த சட்டசபைத் தேர்தல்தான். அடுத்த சட்டசபைத் தேர்தலுக்குள் நாங்கள் மிகப் பெரிய சக்தியாக வளர்வோம். அதற்கேற்ப அடுத்த ஐந்து ஆண்டுகள் கடுமையாக உழைக்கப் போகிறோம் என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications