போராட்டம்.. நாமக்கல் ஆசிரியர்கள் 2,210 பேரிடம் விளக்கம் கேட்டு கல்வி அதிகாரி நோட்டீஸ்!
நாமக்கல் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து விளக்கமளிக்குமாறு 2,210 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
நாமக்கல் : நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து விளக்கமளிக்குமாறு நாமக்கல் மாவட்டத்தில் 2,210 ஆசிரியர்களுக்கு கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரகின்றனர். அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

எனினும் தடையை மீறி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒரு பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நாமக்கலில் போராட்டத்தில் ஈடுபட்ட 2,210 பேரிடம் விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications