மூக்குத்தி பூ மேலே காற்று உட்கார்ந்து பேசுவது போல பேசும் டி.டி.வி.தினகரன்-'ஜால்ரா' நாஞ்சில் சம்பத்
அதிமுகவுக்கு தலைமை ஏற்க தகுதியானவர் டிடிவி தினகரன்தான்; அமைச்சர்கள் அச்சத்தில் அவரை ஒதுக்கி வைத்துள்ளனர் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவை காப்பாற்றுவதற்காக பொறுப்பேற்ற நாளில் இருந்து கண்துஞ்சாமல் உழைத்தவர் டிடிவி தினகரன்; அவர் மூக்குத்தி பூ மேலே காற்று உட்கார்ந்து பேசுவது போல பேசுகிறவர் என வருணித்துள்ளார் நாஞ்சில் சம்பத்.
அதிமுகவில் இருந்து தினகரன் சார்ந்த குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். இதையேற்று தினகரனும் தாம் கட்சியில் ஒதுங்கிவிடுவதாக கூறியுள்ளார்.
ஆனால் தினகரனால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும்; தாம் அவரது தலைமையை மட்டுமே ஏற்பேன் என அடம்பிடித்து வருகிறார் நாஞ்சில் சம்பத். இது தொடர்பாக சன் டிவி நியூஸ் சேனலுக்கு நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டி:

கண்துஞ்சாமல் பணியாற்றியவர்
அதிமுக துணைப் பொதுச்செயலராக பொறுப்பேற்ற நாளில் இருந்து கட்சியை கரைசேர்க்க கண்துஞ்சாமல் பணியாற்றியவர் தினகரன். அதிமுக இலக்கை எட்டுவதற்கு காலம் தந்த சரியான தலைவர் தினகரன் என நான் நம்புகிறேன்.

அயோக்கியத்தனம்
தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரன் முயற்சித்தார் என கூறுவது அயோக்கியத்தனமான புகார். அமைச்சர்களுக்கு ஏதோ நிர்பந்தம் இருப்பதால்தான் தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

பாஜகவே காரணம்
பாஜகவைப் பொறுத்தவரையில் சசிகலா குடும்பம் இல்லாத அதிமுகதான் இருக்க வேண்டும் என அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரே என்னிடம் கூறியிருந்தார். தாம் கட்சியில் சுமையாக இருந்தால் விலகுகிறேன் என தினகரன் அறிவிக்கிற போதுகூட அவரிடம் எந்த ஒரு பதற்றமும் இல்லை.
பதற்றமில்லாதவர்
ஒரு மூக்குத்தி பூ மேலே காற்று உட்கார்ந்து பேசுவது போல பேசுகிறவர் டிடிவி தினகரன். எந்த ஒரு பதற்றத்துக்கும் தினகரன் ஆளாவது இல்லை. ஆயிரம் இடிகளையும் ஆயிரம் அவமானங்களையும் சகித்துக் கொள்கிற வல்லமை கொண்டவர் தினகரன். அவரால்தான் அதிமுகவுக்கு தலைமை தாங்க தகுதியானவர்.

36 எம்.எல்.ஏக்கள் ஆதரவு
தினகரனுக்கு 36 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து வீட்டுக்கு வந்ததை நானே நேரில் பார்த்தேன். இருந்தபோதும் ஆட்சி கலையக் கூடாது என நினைக்கிறவர் தினகரன். அமைச்சர்களின் வீட்டு வாசலில் நிற்க வேண்டிய தேவை தினகரனுக்கு இல்லை. ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்திருந்தால் அதை தடுக்க வேண்டியது தேர்தல் ஆணையம். அதைத் தவிர வேறு என்ன வேலை இருக்கிறது? தேர்தல் ஆணையத்தின் கையாலாகதனத்தையே இது வெளிப்படுத்துகிறது.

கனவில் விழுந்த கல்
அதிமுகவுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை எதுவுமே இல்லை. ஆர்கே நகர் தொகுதியில் தினகரன் 51,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என கணக்குப் போட்டிருந்தேன். என் கனவில் கல் விழுந்துவிட்டது. நாங்கள் காயம்பட்டிருக்கிறோம்.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications