நன்றி மறந்த ஜெயக்குமார்... தினகரனை அலட்சியப்படுத்துவதா? - நாஞ்சில் சம்பத் - வீடியோ
எந்த அழைப்பும் இன்றி நாடு முழுவதும் தினம் தொண்டர்கள் தினகரனைச் சந்திக்க வந்து செல்கின்றனர் என நாஞ்சில் சம்பத் தடாலடியாகக் கூறியுள்ளார்.
சென்னை: கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்திக்க நாடு முழுவதும் இருந்து மக்கள் வந்துகொண்டே இருக்கின்றனர் என தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் நன்றி மறந்தவர் என்றும் சாடியுள்ளார்.
சென்னையில் தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஓபிஎஸ் இருக்கும் இடைத்தை நாடி யாரும் செல்வது இல்லை. அதேபோல், ஓபிஎஸ் நடத்தும் கூட்டங்களுக்கு வந்த மக்களே திரும்பத் திரும்ப ஷிப்ட் முறையில் வந்து செல்கின்றனர்.

ஆனால் டிடிவி தினகரனை சந்திக்க எந்த அழைப்பும் இன்றி, தினமும் நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வந்து செல்கின்றனர். அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிகாரம், கண்ணை மறைக்கிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஜெயக்குமாருக்கு எந்தப் பதவியும் வாங்கமல் இருந்த போது அவரை மீனவ அணி செயலாளராக்கி அழகு பார்த்தார் சசிகலா.
டிடிவி தினகரன் அவருக்கு நிதியமைச்சர் பதவி கொடுத்தார். ஆனால், நன்றி இல்லாமல் நாகரீகமற்ற முறையில் ஜெயக்குமார் நடந்து கொள்கிறார். தினகரனை அலட்சியப்படுத்துகிறார். நான் டிடிவி தினகரன் ஆதரவாளர் தான் என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications