நக்சல் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் சங்கரின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!
சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் சங்கரின் உடலுக்கு சொந்த ஊரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை/விழுப்புரம்: சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் சங்கரின் உடல் இன்று மாலை அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கொட்டச்செரு கிராமத்தில் சி. ஆர். பிஎஃப் வீரர்கள் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நக்சல்கள் திடீர் என்று தாக்குதல் நடத்தினர். இதில் 12 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இத் தாக்குதலில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கழுமரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்ற ராணுவ வீரரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நக்சல் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் சங்கரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இந்நிலையில் ராணுவ வீரர் சங்கரின் உடல் இன்று காலை தமிழகம் வந்தது.
பின்னர் சென்னையிலிருந்து சங்கரின் உடல் விழுப்புரம் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து சங்கரின் உடல் அவரது சொந்த கிராமமான கழுமரம் கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து ராணுவ மரியாதையுடன் சங்கரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications