ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு.. தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்.. நெடுவாசல் மக்கள் அறிவிப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராடுவோம் என்று நெடுவாசல் மக்கள் அறிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து நெடுவாசல் மக்கள் போராடி வருகின்றனர். இந்தத் திட்டத்தை நிறுத்தாவிட்டால் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று நெடுவாசல் மக்கள் அறிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாநிலத்தில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டுள்ளது.
இதனை எதிர்த்து 2ம் கட்டமாக நெடுவாசல் கிராம மக்கள் 68வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய போராட்டத்தில் மணிப்பூர், அஸ்ஸாம், நாகலாந்து மாநிலத்தில் இருந்து பலரும் பங்கேற்றனர்.

சட்டசபையில் தீர்மானம்
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்தத் திட்டத்தை கண்டிப்பாக மாநில அரசு எதிர்க்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

முற்றுகைப் போராட்டம்
நெடுவாசல் மக்களின் கோரிக்கை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். மேலும், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராடுவோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

வடகிழக்கு மாநில போராளிகள் பங்கேற்பு
நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. 68வது நாள் போராட்டமான இன்று மணிப்பூர், அஸ்ஸாம், நாகலாந்து ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இயற்கையை அழிக்க..
இதுகுறித்து அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த கேனன் பேசும் போது, "அஸ்ஸாம் மாநிலத்தில் வனப்பகுதியில் கச்சா எண்ணெய் எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனம் முயன்று வருகிறது. தமிழகத்தை போல் அங்கும் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இயற்கை வழங்கிய நிலங்களை அழித்துவிட்டு வாழ முடியாது" என்று கூறினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications