நீட்: கேரளாவிலிருந்து மாணவர்கள் தமிழகம் திரும்புவதற்கு சிறப்பு பேருந்துகள்!
கேரளாவில் நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் திரும்ப வருவதற்கு வசதியாக இலவச சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
சென்னை: கேரளாவில் நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் திரும்ப வருவதற்கு வசதியாக இலவச சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் , கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பல கஷ்டங்களை தாண்டி தற்போது தேர்வெழுத சென்று இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நீட் தேர்வு எழுத இருக்கும் தமிழக மாணவர்களில் நிறைய பேருக்கு கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 5371 பேருக்கு எர்ணாகுளத்தில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் மதுரை மண்டலத்தில் இருந்து 1550 பேரும், திருச்சியில் இருந்து 1520 பேரும், நெல்லையில் இருந்து 3201 பேரும் தேர்வெழுத செல்கிறார்கள். தென்மாநிலங்களில் இருக்கும் 70 சதவிகித பேருக்கு, கேரளாவில்தான் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு வடஇந்தியாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் திரும்பி வருவதற்காக இலவச சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நீட் எழுதும் மாணவர்கள் மட்டும் பயணிக்கும் வகையில் இந்த பேருந்துகள் இயக்கப்படும். எர்ணாகுளத்தில் இருந்து மதுரைக்கு இரவு 8, 8.15, 8.30, 8.50 ஆகிய நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படும்.
எர்ணாகுளத்தில் இருந்து தூத்துக்குடிக்கு 5, 7, 8 ஆகிய நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படும். திருநெல்வேலியில் இருந்து 4, 6, 7.30, 8.30, 9.30 ஆகிய நேரங்களில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications