சாக்லேட் நிறம்... கொனார்க் சூரியக்கோவில்- புதிய 10 ரூபாய் நோட்டு ரிலீஸ்
மகாத்மா காந்தி புகைப்படத்துடன் கூடிய புதிய 10 ரூபாய் நோட்டுகளை ரிசர்வு வங்கி வெளியிட்டுள்ளது. புதிய ரூ.10 நோட்டுகளில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கையெழுத்து இடம்பெற்றுள்ளது.
Recommended Video

சென்னை: சாக்லேட் நிறத்தில் கொனார்க் சூரியக் கோவில் உடன் கூடிய புதிய 10 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
கடந்த 2005 இல் அச்சடிக்கப்பட்ட 10 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் இருக்கும் நிலையில், புதிய 10 ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலை பெற்று அச்சடித்துள்ளது ரிசர்வ் வங்கி.
சாக்லேட் பிரவுன் வண்ணத்தில் புதிய 10 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் கொனார்க் சூரிய கோயிலின் படம் இருக்கும். 100 கோடி புதிய 10 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2016 நவம்பர் மாதம், இந்திய அரசால், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நிலையில், 17.9 ட்ரில்லியன் ரூபாய் நோட்டுகள் சுழற்சியில் இருந்தது.

2000,500 ரூபாய் நோட்டுகள்
ரிசர்வ் வங்கி பிங்க் நிறத்தில் புதிய 2000 மற்றும் சாம்பல் நிறத்தில் 500 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து விநியோகம் செய்தது. அதன்பின்னர், ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 11.1 % அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய 50 ரூபாய் நோட்டு
கடந்த ஆகஸ்ட் மாதம் மஞ்சள் நிறத்தில் புதிய 200 மற்றும் கடல் நீல நிறத்தில் 50 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது ரிசர்வ் வங்கி. போலி நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தவே புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக தெரிவித்துள்ளது.

ரூபாய் நோட்டில் மாற்றம்
கடந்த வாரம் புதிய வடிவமைப்புக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. 10 ரூபாய் நோட்டில் கடந்த 2005-ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் மாற்றம் செய்யப்படுகிறது. இப்போது 10 ரூபாய் நோட்டில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

கொனார்க் சூரிய கோவில்
போலி நோட்டுகளை தடுப்பதற்காக மத்திய அரசு ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பை மாற்றி உள்ளது .சாக்லேட் நிறத்தில் புதிய நோட்டு உள்ளது. பின்புறம் கொனார்க் சூரியக் கோவிலின் படம் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 1 பில்லியன் 10ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துவிட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மக்கள் கைகளில் கிடைக்குமா?
ஏற்கனவே மத்திய அரசு வெளியிட்ட 200 ரூபாய், 50 ரூபாய் நோட்டுக்கள் கலர் கலராக வெளியானதோடு சரி மக்கள் கைகளில் அதிகமாக கிடைக்கவில்லை. அதே போல இந்த நோட்டும் கிடைக்காமல் போய்விடுமா? சில்லறை தட்டுப்பாட்டை தீர்க்க அதிகமாக 10 ரூபாய் நோட்டுக்கள் கிடைக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications