சாக்லேட் நிறம்... கொனார்க் சூரியக்கோவில்- புதிய 10 ரூபாய் நோட்டு ரிலீஸ்
மகாத்மா காந்தி புகைப்படத்துடன் கூடிய புதிய 10 ரூபாய் நோட்டுகளை ரிசர்வு வங்கி வெளியிட்டுள்ளது. புதிய ரூ.10 நோட்டுகளில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கையெழுத்து இடம்பெற்றுள்ளது.
Recommended Video

சென்னை: சாக்லேட் நிறத்தில் கொனார்க் சூரியக் கோவில் உடன் கூடிய புதிய 10 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
கடந்த 2005 இல் அச்சடிக்கப்பட்ட 10 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் இருக்கும் நிலையில், புதிய 10 ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலை பெற்று அச்சடித்துள்ளது ரிசர்வ் வங்கி.
சாக்லேட் பிரவுன் வண்ணத்தில் புதிய 10 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் கொனார்க் சூரிய கோயிலின் படம் இருக்கும். 100 கோடி புதிய 10 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2016 நவம்பர் மாதம், இந்திய அரசால், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நிலையில், 17.9 ட்ரில்லியன் ரூபாய் நோட்டுகள் சுழற்சியில் இருந்தது.

2000,500 ரூபாய் நோட்டுகள்
ரிசர்வ் வங்கி பிங்க் நிறத்தில் புதிய 2000 மற்றும் சாம்பல் நிறத்தில் 500 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து விநியோகம் செய்தது. அதன்பின்னர், ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 11.1 % அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய 50 ரூபாய் நோட்டு
கடந்த ஆகஸ்ட் மாதம் மஞ்சள் நிறத்தில் புதிய 200 மற்றும் கடல் நீல நிறத்தில் 50 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது ரிசர்வ் வங்கி. போலி நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தவே புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக தெரிவித்துள்ளது.

ரூபாய் நோட்டில் மாற்றம்
கடந்த வாரம் புதிய வடிவமைப்புக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. 10 ரூபாய் நோட்டில் கடந்த 2005-ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் மாற்றம் செய்யப்படுகிறது. இப்போது 10 ரூபாய் நோட்டில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

கொனார்க் சூரிய கோவில்
போலி நோட்டுகளை தடுப்பதற்காக மத்திய அரசு ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பை மாற்றி உள்ளது .சாக்லேட் நிறத்தில் புதிய நோட்டு உள்ளது. பின்புறம் கொனார்க் சூரியக் கோவிலின் படம் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 1 பில்லியன் 10ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துவிட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மக்கள் கைகளில் கிடைக்குமா?
ஏற்கனவே மத்திய அரசு வெளியிட்ட 200 ரூபாய், 50 ரூபாய் நோட்டுக்கள் கலர் கலராக வெளியானதோடு சரி மக்கள் கைகளில் அதிகமாக கிடைக்கவில்லை. அதே போல இந்த நோட்டும் கிடைக்காமல் போய்விடுமா? சில்லறை தட்டுப்பாட்டை தீர்க்க அதிகமாக 10 ரூபாய் நோட்டுக்கள் கிடைக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications