இசை கல்லூரியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எந்த பதவியும் கிடைக்காது: புஷ்பவனம் குப்புசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: இசை கல்லூரியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எந்த பதவியும் கிடைக்காது என்று புஷ்பவனம் குப்புசாமி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
தமிழ்நாடு இசை கல்லூரிக்கு துணை வேந்தர் தேர்வு செய்யப்பட்டார். இதுகுறித்து தற்போது புஷ்பவனம் குப்புசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் ''இசை கல்லூரிக்கு நியாயமாக துணைவேந்தர் தேர்வு செய்யப்படவில்லை. நாட்டுப்புற பாடல்கள் பாடும் காரணத்தால் மட்டுமே எனக்கு இசை பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி மறுக்கப்பட்டது'' என்றுள்ளார்.
மேலும் ''ஜெயலலிதா இருந்திருந்தால் இசை பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியை எனக்கு அளித்து இருப்பார். இப்போதெல்லாம் இசை கல்லூரியில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எந்த பதவியும் கிடைக்காது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications