ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தால் அனைவருக்கும் கிடைத்த வெற்றி: பொன்.ராதகிருஷ்ணன்
மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி கிடைத்தால் அது அனைவருக்கும் கிடைத்த வெற்றி என்று மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவரான அழகுமுத்துக்கோன் சரித்திரத்தை போற்றும் வகையில் அஞ்சல் தலை வெளியீடு விழா இன்று மதுரையில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதரராவ், பொன்.ராதகிருஷ்ணன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வருகிற 2016-ம் ஆண்டு பொங்கல் விழாவை அனைவரும் ஜல்லிக்கட்டு விழாவாக கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவரும் எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு ஜல்லிக்கட்டு நடத்த முழு முயற்சிகள் எடுத்து வருவதாக கூறியதையடுத்து அவர்கள் நடத்த இருந்த போராட்டம் கைவிடப்பட்டது. இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ஜ.க. மேல் வைத்துள்ள நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது. ஜல்லிக்கட்டுக்காக முழு முயற்சி எடுத்து வரும் நிலையில் இளைஞர்கள் யாரும் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்த வேண்டாம். ஜல்லிக்கட்டு சிக்கல் ஏற்பட்டது பா.ஜ.க. ஆட்சியில் அல்ல. இன்று போராடி கொண்டிருப்பவர்கள் அன்றே போராடி இருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காது. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தால் அது எனக்கு மட்டும் கிடைத்தது இல்லை அனைவருக்கும் கிடைத்த வெற்றி என்று அவர் கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications