கும்பகோணத்தில் பாஜக பிரமுகரின் மருத்துவமனையில் நர்ஸ் தற்கொலை.. உறவினர்கள் போராட்டம்
கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பாஜக பிரமுகருக்கு சொந்தமான மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்துவந்த வைஷ்ணவி என்ற பெண், மருத்துவமனையில் வளாக அறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் 'பாமா சுப்ரமணியம்' என்ற பெயரில் மருத்துவமனை ஒன்றையும் நடத்தி வருகிறார். கார்த்திகேயன் பாஜக சிந்தனை பிரிவு மாநில துணை தலைவராக உள்ளார். இவர் மருத்துவமனை மட்டுமின்றி நிதி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கார்த்திகேயனின் மருத்துவமனையில் திருவிடைமருதூர் அருகே தோப்புத்தெருவைச் சேர்ந்த 22 வயதாகும் வைஷ்ணவி என்ற இளம்பெண், கடந்த ஆறு மாதங்களாக நர்ஸாக பணியாற்றி பார்த்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள அறையில் வைஷ்ணவி திடீரன தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி போலீசாருக்கு மருத்துவமனை நிரவாகம் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நர்ஸ் வைஷ்ணவியின் உடலை வந்த கைப்பற்றிய போலீசார், கும்பகோணம் அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் உடலை ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர். அப்போது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நர்ஸ் வைஷ்ணவி சாவில் மர்மம் இருப்பதாகவும், இறந்த உடன் தங்களுக்கு முறையாக தகவலை தெரிவிக்கவில்லை என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். உடலை பார்க்க கூட மருத்துவமனை தரப்பில் இருந்து யாரும் வரவில்லை.
வைஷ்ணவி தூக்கில் தொங்கிய விதத்தில் சந்தேகம் இருக்கிறது. எங்கள் மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை இல்லை. எங்களால் வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டதை ஏற்க முடியவில்லை என்று குற்றம்சாட்டினர்.
இதையடுத்து உடலை வாங்க மறுத்த உறவினர்களிடம் போலீஸார் உரிய விசாரணை நடத்தப்படும் எனக் கூறி சமாதானம் செய்தனர். அதை தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு சென்றனர்.
இதனிடையே நர்ஸ் வைஷ்ணவி தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக கும்பகோணம் கிழக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால், உடனே தமிழக அரசின் 104 என்ற எண்ணிற்கு அழைத்து தற்கொலைஎண்ணத்தில் இருந்து விடுபடுங்கள். இதேபோல் சினோகா தற்கொலை தடுப்பு மையத்தின் எண்ணிற்கும் அழையுங்கள்.
சினோகா தற்கொலை தடுப்பு மையம் - 044 -2464000 (24 hours)
தமிழக அரசின் தற்கொலை தடுப்பு மையம் - 104 (24 hours)
iCall தற்கொலை தடுப்பு எண் - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm)
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications