சிங்கிளா படுத்துப் போராடிய "சிங்கம்".. புதுச்சேரி பஸ் ஸ்டாண்ட்டில் பரபரப்பு! #cauvery
புதுச்சேரி: காவிரி பிரச்சினை தொடர்பாக இன்று புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் முழு வெற்றி பெற்றது. இந்த நிலையில் தமிழக அரசுப் பேருந்து ஒன்றை டிரைவர் எடுக்க முயன்றபோது ஒருவர் மட்டும் தனியாக பஸ் முன்பு படுத்துக் கொண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை கைது செய்து அப்புறப்படுத்திய பின்னர் பஸ் புறப்பட்டுச் சென்றது.
தனி நபராக போராடிய அந்த போராட்டக்காரர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 50 வயதான அவர் அம்பேத்கர் மக்கள் சங்கத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளத.

புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தனியார் பஸ்கள், ஆட்டோ, டெம்போ ஓடவில்லை. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அதே வேளையில் தமிழகம் மற்றும் புதுவை அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.
இன்று காலை 7 மணி அளவில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தமிழக அரசு பஸ் ஒன்று புறப்பட தயாரானது. அப்போது திடீரென ஒருவர் பஸ்சை இயக்க கூடாது என வலியுறுத்தி அந்த பஸ் முன்பு படுத்து போராட்டம் நடத்தினார். தகவல் அறிந்ததும் அருகில் இருந்த போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்திய அந்த நபரை உருளையன் பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
விசாரணையில் அவர் பெயர் சந்திரன் என்று தெரிய வந்தது. காவிரிப் பிரச்சினைக்காக எந்த அமைப்பு, கட்சியுடனும் சேராமல் தனியாக அவர் போராடியதாக தெரிவித்தாராம்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications