தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் மகனின் பதில் என்ன தெரியுமா?
தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டுக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் பதிலளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டுக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் பதிலளித்துள்ளார்.
கும்பகோணத்தை அடுத்த ஆலங்குடியில் குருபகவான் சன்னதியில் குருபெயர்ச்சியை முன்னிட்டு இரவு 10 .05 மணி அளவில் துலாம் ராசியில் இருந்து விருச்சக ராசிக்கு பெயர்ந்துள்ளார்.
காலையில் சிறப்பு ஹோமமும் உலக நன்மைக்காக சிறப்பு ஹோமமும் நடைபெற்றது. நாளை முதல் லட்சார்ச்சனை விழா ஐந்து நாள் நடைபெறும்.
[ஆட்சியை கலைக்க திட்டம்.. தினகரனை சந்திக்க ஓ.பி.எஸ் நேரம் கேட்டார்.. தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு!]
குருபெயர்ச்சி விழா
இந்த குரு பெயர்ச்சி விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஓபிஎஸ் மகனிடம் கேள்வி
இந்த குரு பெயர்ச்சி விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் கலந்து கொண்டார். அப்போது பத்திரிகையாளர்கள் டிடிவி தினகரனை சந்திக்க துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரம் கேட்டது தொடர்பான தங்க தமிழ்ச்செல்வனின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர்.
இனி தெரியவரும்
அதற்கு பதிலளித்த ரவீந்திரநாத் இந்த குருப்பெயர்ச்சி நல்லபடியாக முடிந்தது. இனி நேரம் யாருக்கு நல்லது கெட்டது என்று காலம் பதில் சொல்லும் என்று தெரிவித்தார்.
கடந்த காலம்
இதுதொடர்பான கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தங்க தமிழ்ச்செல்வனின் பேட்டியை முழுவதுமாக பார்த்துவிட்டு பேட்டியளிக்கிறேன், அது கடந்த காலம் என கூறியது குறிப்பிடத்தக்கது.