ரிஜிஸ்டர் திருமணம் செய்ய பெற்றோர் அனுமதி வேண்டும்.. பதிவுத்துறையின் ரகசிய சுற்றறிக்கை
இனி பதிவு திருமணம் செய்ய பெற்றோர் அனுமதி வேண்டும் என்று பதிவுத்துறை ரகசிய சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.
Recommended Video

சென்னை: இனி பதிவு திருமணம் செய்ய பெற்றோர் அனுமதி வேண்டும் என்று பதிவுத்துறை ரகசிய சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.
பதிவுத்துறை இயக்குனர் அனைத்து அலுவலகங்களுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார். இதுகுறித்து அரசு அதிகாரப்பூர்வமாக வெளியே தெரிவிக்காமல் இப்படிப்பட்ட மாற்றம் செய்து இருக்கிறது.
இந்த சட்டம் தமிழகத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும், மக்களின் உரிமைகளையும் பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

என்ன தேவை
இந்த சுற்றறிக்கையில் படி இருவர் பதிவு திருமணம் செய்து கொள்ள, அவர்கள் பெற்றோர்களின் ஒரிஜினல் அடையாள அட்டை வேண்டும். பின் அந்த அடையாள அட்டை உண்மையா என்று சோதிக்கப்படும். பெற்றோர் இறந்துவிட்டால் இறப்பு சான்றிதழ் தேவைபடும்.

முன்
இதற்கு முன்பெல்லாம் பெற்றோர் அடையாள அட்டை தேவை இல்லை. திருமணம் செய்பவர்களின் வயது பற்றிய அடையாளமும், சாட்சி கையெழுத்து போடுபவர்களின் அடையாள அட்டையும் இருந்தால் போதும். புதிய சட்டம் காரணமாக அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். இதை சோதனை செய்ய அதிகாரிகள் பெற்றோரை அழைக்க தேவை இருக்கும்.

சட்டத்திற்கு எதிரானது
இந்த சுற்றறிக்கை முழுக்க முழுக்க இந்து திருமண சட்டத்திற்கு எதிரானது ஆகும். இந்து திருமண சட்ட படி திருமண வயது நிரம்பிய இருவர் அவர்களின் அப்பா, அம்மா சம்பந்தம் இன்றி திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் புதிய விதிப்படி அப்படி செய்ய முடியாது.

பெரிய பிரச்சனை
இந்த புதிய சுற்றறிக்கை ஜாதி மறுப்பு திருமணத்திற்கு முழுக்க முழுக்க எதிரானது. தமிழகத்தின் அடிப்படை அரசியல் மாற்றத்தையும், சமூக நீதியையும் மோசமாக்கும் சுற்றறிக்கை பலருக்கும் தெரியாமல் அனுப்பப்பட்டு இருக்கிறது.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications