லஞ்சம் வாங்குபவர்களை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு பாராட்டு விழா: போட்டுத் தாக்கிய கலெக்டர்!
லஞ்சம் வாங்குபவர்களை பிடித்துக்கொடுத்தால் நானே பாராட்ட விழா நடத்துவேன் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் லஞ்சம் வாங்குபவர்களை பிடித்துக்கொடுத்தால் நானே பாராட்ட விழா நடத்துவேன் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கிராமங்களில் தங்கி பணி செய்ய சொல்கிறேன். பலரும் கேட்கவில்லை, திருந்தவில்லை என்றும் ஆட்சியர் சுப்பிரமணியன் சாடினார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஒரு பக்கம் அரசு அதிகாரிகள் ஊழியர்களும், எதிரில் விவசாயிகளும் அவர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை எடுத்து கூறினார்கள்.

கிராம அலுவலர்கள் உட்பட வருவாய்துறையில் ஏகப்பட்ட லஞ்சம் வாங்கப்படுகிறது. எந்த அதிகாரியும் அந்தந்த கிராமங்களில் தங்குவதில்லை. கடும் வறட்சியில் வாடிப்போயுள்ள நாங்கள் எந்த சலுகைக்காக சான்றுக்காக போனாலும் பணம் இல்லாமல் செய்வதில்லை என்று அய்யாசாமி என்ற விவசாயி சொன்னவுடன், இதேபோல் பல விவசாயிகளும் குற்றம் சாட்டி பேசினார்கள்.
அப்போது ஆட்சியர் சுப்பிரமணியன், பலமுறை அலுவலக மீட்டிங்கிளும் சர்க்குலர் மூலமாக சொல்லியுள்ளேன் மக்களிடம் லஞ்சம் வாங்கக் கூடாது என்று. அதேபோல் சம்மந்தப்பட்ட கிராமங்களில் தங்கி பணி செய்ய சொல்கிறேன். பலரும் கேட்கவில்லை. திருந்தவில்லை எனவே அப்படிப்பட்டவர்களை லஞ்ச ஒழிப்பு போலீஸ் மூலம் லஞ்சம் கொடுக்கும்போது கைது செய்யுங்கள்.
அப்படி செய்யும் விவசாயிகளுக்கு, பொதுமக்களுக்கு நானே பாராட்டு விழா நடத்துகிறேன் என்று போட்டுதாக்க, அரசு அதிகாரிகள், ஊழியர்கள் முகத்தில் அசடு வழிந்தது. கூட்டத்தில் விவசாயிகள் மத்தியில் பலத்த கைதட்டல் எழுந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications