அடிக்கடி ஸ்டிரைக் செய்யும் வங்கி ஊழியர்கள்: எரிச்சலில் மக்கள்
சென்னை: இந்தியா முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வெளியிட்டுள்ள வேலைநிறுத்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுவை உள்ளிட்ட 6 மாநிலங்களில் 23 ஆயிரம் வங்கிக் கிளைகளில் சுமார் ஒன்றரை லட்சம் வங்கி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் மட்டும் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 9 வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் கடந்த மாதம் 12 ஆம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மும்பையில் தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் வங்கி ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதில் உடன்பாடு ஏற்பட்டால், செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கும் வேலை நிறத்தம் வாபஸ் பெறப்படும் என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அடிக்கடி வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபடுவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தனியார் நிறுவனங்கள் ஊதியம் அளிக்கும் நாளிலேயே வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்திருப்பது பல லட்சம் பேரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications