புதுவையில் மக்கள் ஆவேசம்.. 3 மதுபானக் கடைகளுக்கு தீவைத்து எரித்தனர்!
புதுச்சேரியில் உள்ள 3 மதுபானக் கடைகளுக்கு தீவைத்து கொளுத்தி மக்கள் தங்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள சோரியங்குப்பம் கிராமத்தில் உள்ள 3 மதுபானக் கடைகளுக்கு மக்கள் தீவைத்து கொளுத்தினர்.
நாடு முழுவதும் மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது மதுக்கடைகள். பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு இதுதான் முதன்மை காரணமாக கூறப்படுகிறது. பெரும்பாலான விபத்துகளுக்கும், அதில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் இந்த மதுதான் காரணம் என்று கருதிய உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்தது.

அதாவது தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டருக்குள் அமைக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்பதுதான் தீர்ப்பாகும். இதை அடுத்து தமிழகத்தில் 3,500 மதுபானக் கடைகள் மூடப்பட்டன. எனினும் ஊருக்குள் கடையை விரிக்க ஊழியர்கள் முயற்சித்தும், பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதையும் மீறி அமைத்தாலும், பொதுமக்களே கடையை உடைத்து நொறுக்கி் வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மதுபானக் கடைகளுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
புதுச்சேரி- கடலூர் சாலையில் சோரியங்குப்பம் கிராமத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளை அகற்ற வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது மதுபானக் கடைகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் 3 மதுக்கடைக்கு தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications