மக்கள் நீதி மய்யம்.. கமல்ஹாசனின் புதிய கட்சிக்கு மக்கள் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு?
கமல்ஹாசனின் புதிய கட்சியின் பெயருக்கு மக்கள் அதிக அளவில் வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள்.
Recommended Video
சென்னை: கமல்ஹாசனின் புதிய கட்சியின் பெயருக்கு மக்கள் அதிக அளவில் வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள். பெயரில் இருக்கும் புதுமை காரணமாக பலரும் இதை ரசித்து இருக்கிறார்கள்.
நேற்று மதுரை ஒத்தக்கடையில் தன்னுடைய கட்சியை தொடங்கி கொடியும் ஏற்றிவிட்டார். கமல் நடத்திய முதல் அரசியல் மாநாடு சிறப்பாக நடந்து முடிந்துவிட்டது.
ஏற்கனவே கட்சியின் சின்னம் மக்கள் மத்தியில் சென்று சேர்ந்துவிட்டது. இணைந்த கைகள் புகழடைந்த அளவிற்கு மக்கள் நீதி மய்யமும் பெரிய அளவில் புகழ் அடைந்து இருக்கிறது.
இரண்டுமே இல்லையே
இவரது கட்சி பெயரில் திராவிடம், தேசியம் என்ற இரண்டு வார்த்தையும் இல்லை. தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் இந்த இரண்டில் ஒன்று இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி போல இருந்தது. அதை கமல் உடைத்து இருக்கிறார். அவர் திராவிடம், தேசியத்தை பயன்படுத்தாதற்கு 11.49 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.
கழகம் கூட இல்லை
அதேபோல் இவரது கட்சி பெயரில் கழகம் என்ற வார்த்தையும் இல்லை. கட்சி, கழகம் என்று முடியாமல் முதல் முறை தமிழ்நாட்டில் ஒரு கட்சி மய்யம் என்று முடிந்து இருக்கிறது. கழகம் இல்லாதது பெரிய ஆறுதல் என்று 16.2% பேர் தெரிவித்து இருக்கிறார்கள்.
மொத்தமாக போச்சு
ஆனாலும் சிலர் கமலின் கட்சி பெயர் இன்னும் பெரிய அளவில் இருக்கும் என்று நினைத்து இருக்கிறார்கள். இதன் காரணமாகவே சிலர் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். இதனால் கட்சி பெயர் சப்புன்னு இருக்கு என்று 18.16% பேர் தெரிவித்து இருக்கிறார்கள்.
சூப்பரோ சூப்பர்
பெருவாரியான மக்களை இந்த கட்சி பெயர் கவர்ந்து இருக்கிறது. பலருக்கும் கேட்டதும் பிடித்துள்ளது. இந்த பெயரும் நேற்று முழுக்க டிரெண்ட் ஆனது. இதனால் கட்சியின் பெயர் சூப்பரோ சூப்பர் என்று 22.5% தெரிவித்துள்ளனர்.
ரொம்ப புதுசு
அதேபோல் கட்சியின் பெயர் மிகவும் புதுமையாக இருக்கிறது. மய்யம் என்கிற வார்த்தையை பலர் இப்போதுதான் கேட்டு இருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு பின் கட்சி பெயரில் நீதி என்ற வார்த்தை இடம் பிடித்து இருக்கிறது. இதனால் மிக மிக புதுமையான பெயர். சபாஷ்! என்று 31.64% பேர் தெரிவித்துள்ளனர்.