சுடுகாட்டு பாதையை ஆக்கிரமித்த அதிமுக பிரமுகர்.. பாடை கட்டி போராட்டம் நடத்திய மக்கள்
வள்ளியூர் அருகே சவுந்திரபாண்டியபுரத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை கண்டித்து, அப்பகுதி மக்கள் 7வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை அதிமுக பிரமுகர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி 100க்கும் மேற்பட்டோர் 7வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த சவுந்திரபாண்டியபுரத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திலுள்ள மக்கள், இறந்தவர்களை எரியூட்ட பல ஆண்டுகளாக சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஓடைக்கரையில் உள்ள சுடுகாட்டை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ஓடைகரையில் சுடுகாட்டுக்கு அருகே பஞ்சாயத்து மூலமாக ஆழ்துளை கிணறும், மயான கொட்டகையும் கான்கீரிட்டில் கட்டப்பட்டுள்ளது. தற்போது ஓடைக்கரை அருகே உள்ள நிலத்து உரிமையாளர்களால் சுடுகாட்டு செல்லும் ஓடை பாதையை ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர். இதனால் இறந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தரக்கோரி சவுந்திரபாண்டியபுரத்தில் உள்ள அம்மன் திடலில் கிராம மக்கள் கடந்த 20ம் தேதி தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். அவர்களின் போராட்டம் 7-வது இன்றும் தொடர்ந்தது. இன்று பாடை கட்டி ஒப்பாரி வைக்கும் போராட்டமும் நடத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுடுகாட்டு பாதையை ஆளுங்கட்சிப் பிரமுகர் ஆக்கிரமித்து உள்ளதாகவும் அதனால் ஓடை பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்!












Click it and Unblock the Notifications