75 நாட்கள்... எவர் கண்ணிலும் காட்டப்படாத 'அம்மா'வின் முகம்... மக்கள் கண்ணீர் கதறல்! #RIPAmma
சென்னை: கடந்த 75 நாட்களாக எவர் கண்ணிலும் காட்டப்படாமலிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முகத்தை முதல் முறையாக இன்று பார்த்த மக்கள் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வடித்தனர், கதறி அழுதனர்.
கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் போன்ற சிறு உடல் நலக் கோளாறுகளுக்காக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்தார் முதல்வர் ஜெயலலிதா. அங்கே சேர்ந்த பிறகு ஒவ்வொரு புதிய நோயாக அவரது உடலைப் பாதித்தன.

முந்தைய நாள் மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் பங்கேற்று, பத்து நிமிடத்துக்கு மேல் உரையாற்றிய ஜெயலலிதா, அடுத்த நாளே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றிலிருந்து இன்று அதிகாலை 6.15 மணி வரை அவரது முகம், அல்லது மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவது போன்ற புகைப்படம் எதையுமே மருத்துவமனை நிர்வாகமோ, உடனிருந்த சசிகலா போன்றவர்களோ வெளியிடவில்லை. தமிழக ஆளுநர், மத்திய அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், திரைப் பிரமுகர்கள் என யாராக இருந்தாலும் சிகிச்சைப் பெறும் ஜெயலலிதாவைப் பார்க்க முடியாத நிலைதான் இருந்தது.
நேற்று இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா மரணித்துவிட்டார் என்று கூறப்பட்ட பிறகு, அவரது உடலையாவது பொதுமக்களுக்குக் காட்டுவார்கள் என விடிய விடிய காத்திருந்தனர் மக்களும் தொண்டர்களும். ஆனால் விடிந்த பிறகு, 6.15 மணிக்கே அவரது முகத்தைக் காட்டினார்கள்.
அவரது முகத்தைப் பார்த்ததுமே 'அய்யோ... அம்மா.. உங்கள இப்படியா பார்க்கணும் தாயே...' என வெடித்துக் கிளம்பியது மக்களின் அழுகைக் குரல். தலையிலும் வாயிலும் அடித்தபடி, கதறி அழுதபடி ஜெயலலிதாவுக்கு தங்களின் கடைசி மரியாதையைச் செலுத்திக் கொண்டுள்ளனர் மக்கள்.
-
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications