75 நாட்கள்... எவர் கண்ணிலும் காட்டப்படாத 'அம்மா'வின் முகம்... மக்கள் கண்ணீர் கதறல்! #RIPAmma
சென்னை: கடந்த 75 நாட்களாக எவர் கண்ணிலும் காட்டப்படாமலிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முகத்தை முதல் முறையாக இன்று பார்த்த மக்கள் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வடித்தனர், கதறி அழுதனர்.
கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் போன்ற சிறு உடல் நலக் கோளாறுகளுக்காக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்தார் முதல்வர் ஜெயலலிதா. அங்கே சேர்ந்த பிறகு ஒவ்வொரு புதிய நோயாக அவரது உடலைப் பாதித்தன.

முந்தைய நாள் மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் பங்கேற்று, பத்து நிமிடத்துக்கு மேல் உரையாற்றிய ஜெயலலிதா, அடுத்த நாளே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றிலிருந்து இன்று அதிகாலை 6.15 மணி வரை அவரது முகம், அல்லது மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவது போன்ற புகைப்படம் எதையுமே மருத்துவமனை நிர்வாகமோ, உடனிருந்த சசிகலா போன்றவர்களோ வெளியிடவில்லை. தமிழக ஆளுநர், மத்திய அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், திரைப் பிரமுகர்கள் என யாராக இருந்தாலும் சிகிச்சைப் பெறும் ஜெயலலிதாவைப் பார்க்க முடியாத நிலைதான் இருந்தது.
நேற்று இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா மரணித்துவிட்டார் என்று கூறப்பட்ட பிறகு, அவரது உடலையாவது பொதுமக்களுக்குக் காட்டுவார்கள் என விடிய விடிய காத்திருந்தனர் மக்களும் தொண்டர்களும். ஆனால் விடிந்த பிறகு, 6.15 மணிக்கே அவரது முகத்தைக் காட்டினார்கள்.
அவரது முகத்தைப் பார்த்ததுமே 'அய்யோ... அம்மா.. உங்கள இப்படியா பார்க்கணும் தாயே...' என வெடித்துக் கிளம்பியது மக்களின் அழுகைக் குரல். தலையிலும் வாயிலும் அடித்தபடி, கதறி அழுதபடி ஜெயலலிதாவுக்கு தங்களின் கடைசி மரியாதையைச் செலுத்திக் கொண்டுள்ளனர் மக்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications