பஸ்ல மட்டுமில்ல டூ வீலர்ல போறவங்களுக்கும் டென்ஷன்... பெட்ரோல் விலை ரூ. 75.12!
டீசல் விலையில் வரலாற்றின் உச்சத்தை தொட்ட நிலையில் மூன்றரை ஆண்டுகளுக்கு பின் பெட்ரோல் விலையும் தொடர்ந்து ரூ. 75ஐ தாண்டி வருகிறது.
Recommended Video

சென்னை: வரலாற்றிலேயே முதன்முறையாக டீசல் விலை உச்சத்தை அடைந்த நிலையில் மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் பெட்ரோல் விலையும் லிட்டருக்கு ரூ. 75.12 காசுகளை எட்டிவிட்டது.
கடந்த ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை நிறுவனங்கள் அன்றாடம் நிர்ணயித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்தது. மாதத்திற்கு 2 முறை விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த அனுமதி அளித்த போது கடைசியாக பெட்ரோலின் விலை ரூ. 68.02ஆகவும், டீசலின் விலை ரூ. 57.41 ஆகவும் இருந்தது.
தினசரி விலை நிர்ணயம் செய்வதால் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் அதன் பலன் உடனடியாக மக்களுக்கு வந்து சேரும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இந்த பாசாங்கெல்லாம் பளிக்கவே இல்லை தினசரி அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யத் தொடங்கியது முதல் விர் ரென ராக்கெட்டில் ஏறிச் சென்று கொண்டு தான் இருக்கிறது பெட்ரோல், டீசல் விலை.

விலை உயர்வு
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து மக்கள் நெருக்கடியான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் கலால் வரியாக பெட்ரோல், டீசல் மீதான ரூ. 2ஐ குறைத்தது மத்திய அரசு. எனினும் உச்சத்துக்கு சென்று கொண்டே இருக்கும் பெட்ரோல், டீசல் விலையானது மக்கள் கழுத்தை நெரித்து வருகிறது.

விலை உயர்வு
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து மக்கள் நெருக்கடியான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் கலால் வரியாக பெட்ரோல், டீசல் மீதான ரூ. 2ஐ குறைத்தது மத்திய அரசு. எனினும் உச்சத்துக்கு சென்று கொண்டே இருக்கும் பெட்ரோல், டீசல் விலையானது மக்கள் கழுத்தை நெரித்து வருகிறது.

டீசலின் விலையும் புதிய உச்சம்
மாநில அரசுகள் தான் இனி வரி குறைப்பு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு பிரச்னையை திசை திருப்பி விட்டது. சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 75.12ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 66.84 ஆகவும் இருக்கிறது.

மூன்றரை ஆண்டுக்குப் பிறகு உச்சம்
2014ம் ஆண்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.78 ஆக இருந்தது. மூன்றரை ஆண்டுகளுக்கு பின், தற்போது, மீண்டும் பெட்ரோல் விலை, 75 ரூபாயை தாண்டி உள்ளது.

போக்குவரத்துக்கு சிரமம்
இருப்பினும் 2013 செப்டம்பரில் இருந்த உச்ச விலையான ரூ.79.55ஐ இன்னும் தாண்டவில்லை என்று சற்றே நிம்மதியடையலாம். இரு சக்கர வாகனத்தை விட்டு பேருந்தில் பயணிக்கலாம் என்றால் இரட்டிப்பாகியுள்ள பஸ் கட்டணம் ஒரு பக்கம் மக்களை வாட்ட மற்றொரு புறம் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையென மக்களின் அன்றாட போக்குவரத்தே ஆடம்பரமான விஷயமாக மாறி இருக்கிறது.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications