போயஸ் தோட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும்- கொங்குநாடு ஈஸ்வரன் வலியுறுத்தல்
சென்னை: போயஸ் தோட்டத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் என கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக பொய் கூறினோம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அண்மையில் கூறினார். இதன் மூலம் ஜெயலலிதா மரணம் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

இதனை ஒப்புக்கொண்டுள்ள அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவை சந்திக்க யாரையும் அனுமதிக்காமல் சசிகலா குடும்பத்தினர் அவரை கொன்று விட்டதாகவும் மதுசூதனன் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் கூறியது குறித்து கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார். திண்டுக்கல் சீனிவாசன் கூறியது குறித்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அப்பல்லோ மருத்துவமனை மற்றும் ஜெயலலிதா வீடு அமைந்துள்ள போயஸ்கார்டனில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழகத்தில் குதிரை பேர ஆட்சி நடப்பதாகவும் அதனை ஆளுநர் தடுக்க வேண்டும் என்றும் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications