எங்க குலசாமி

எங்க குலசாமி
அன்னை தமிழகத்தை, அன்புச் சரணாலயமாய்
பூத்துக் குலுங்க வைக்கும், புறநானூற்றின் புதுவடிவே!
தாயாகி, தந்தையாகி, தமிழர் குலச்சாமியாகி,
யாதுமாகி நிற்கும் எங்கள் தாயுமானவரே!
"என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று பாடிய நாவுக்கரசரின் திருவாய்மொழிப்படி
வாழுகின்ற எடுத்துக்காட்டாய் திகழும் வரலாற்று வடிவே!
முன்னிருந்தோர் முடிக்க இயலாப் பெருஞ்செயல்களை
முன்நின்று நிறைவேற்றும் முத்தமிழின் திருவடிவே!
வேதனைகளெல்லாம் தமக்கென்றும்,
விளைகின்ற நலம் எல்லாம் பிறர்க்கென்றும்,
தமிழகம் செழிக்க தவ வாழ்வு வாழ்கின்ற தியாகத் திருவுருவே!
நிலத்தில் யார்க்கும் அஞ்சா நன்னெறியும்,
நேருக்கு நேர் நின்று போராடும் நெஞ்சுரமும்,
தனக்கே உரிமை எனக் கொண்ட தன்மானச் சிங்கமே!
சோழநாட்டுக் கரிகால் பெருவளத்தானும்,
பாண்டி நாட்டு ராணி மங்கம்மாளும்,
வாளெடுத்துப் போரிட்டு வரவழைத்த நீராதார உரிமைகளை,
வெள்ளைத் தாளெடுத்துப் போரிட்டு வென்று வந்த வீரத்தாயே!
தமிழகமே தனது இல்லமாய்,
தமிழ் மக்களே தனது சுற்றமாய்
தமிழ்நாட்டின் நலனுக்கென
தன் வாழ்வையே அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டிருக்கும்
தன்னிகரில்லாத் தங்கமே!
மக்கள் முதல்வர், மாண்புமிகு இதய தெய்வம், புரட்சித் தலைவி அம்மா அவர்களே!












Click it and Unblock the Notifications