தூத்துக்குடி: செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் மீதும் போலீஸ் தாக்குதல்
தூத்துக்குடியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீதும் போலீஸார் தாக்குதல் நடத்தினர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஸ்டெர்லைட் போராட்டம், மக்கள் மீது போலீஸார் தடியடி-வீடியோ
தூத்துக்குடி: தூத்துக்குடியில் போராட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று தூத்துக்குடி போராட்டம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற மக்கள் பேரணியை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் அங்கு பதற்றம் நிலவியது. பின்னர் பொதுமக்கள் போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து வஜ்ரா வாகனத்தையும் பின்னோக்கி தள்ளிவிட்டு போராட்டக்காரர்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தனர்.
அங்கு முற்றுகையிட்ட அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இந்த செய்திகளை சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர். அவர்களது கேமராக்களை பறித்து உடைத்தெறிந்தனர்.













Click it and Unblock the Notifications