மானாமதுரை: சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய மணல் கடத்தல் கும்பல்- போலீஸ் துப்பாக்கிச் சூடு
மானாமதுரை: மானாமதுரை அருகே சட்டவிரோதமாக செம்மண் அள்ளியதை தடுத்த எஸ்ஐ யை கடத்தல்காரர்கள் தாக்க முயன்றனர். இதனையடுத்து துப்பாக்கிச்சுசூடு நடத்தி எஸ்ஐ உயிர் தப்பினார்.
ராமநாதபுர மாவட்ட எல்லையில் தெ.புதுக்கோட்டை அருகே செம்மண் குவாரி செயல்பட்டு வருகிறது.
இந்த செம்மண் குவாரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக வந்த தகவலையடுத்து எஸ்,ஐ முத்துகிருஷ்ணன், 3 போலீசார், இரண்டு பிரண்ட்ஸ் ஆப்போலீஸ், ஒரு ஊர்காவல்படை வீரர் என மொத்தம் ஏழு பேர் ரோந்து சென்றனர்.

சிவகங்கை மாவட்ட எல்லையில் செம்மண் அள்ளி அதனை ராமநாதபுர மாவட்ட எல்லைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மணலை விற்பனை செய்ய கொண்டு சென்றுள்ளனர். அங்கு நேரில் சென்று எஸ்ஐ முத்துகிருஷ்ணன் விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது பொக்லைன் இயந்திரம், நான்கு டாரஸ் லாரி, ஒரு அரைபாடி லாரி ஆகியவற்றில் மணல் அள்ளி கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து எஸ்ஐயை தள்ளி விட்டுள்ளனர்.
கீழே விழுந்த எஸ்ஐ எழுந்து செல்போனில் சக போலீசாரை தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போனையும் பறித்து அடித்து உதைத்துள்ளனர். பலத்த காயமடைந்த எஸ்ஐ உயிர் தப்பிக்க எண்ணி துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி எஸ்ஐ இரண்டு ரவுண்டு துப்பாக்கி சூடு நடத்தினார்.
துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்கவும் கடத்தல்காரர்கள் இருட்டில் தப்பியோடி விட்டனர். சிவகங்கை எஸ்பி பயிற்சியில் இருப்பதால் ராமநாதபுர எஸ்பி(பொறுப்பு) மயில்வாகனன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். காயமடைந்த எஸ்ஐ முத்துகிருஷ்ணன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிவகங்கை மாவட்ட எல்லையில் தொடர்ந்து மணல்அள்ளியுள்ளனர். அதனால் பல இடங்களில் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தில் சராமாரியாக மணல் அள்ளி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
ராமநாதபுர மாவட்ட எல்லையை தாண்டி சிவகங்கை மாவட்டத்திலும் அள்ளி விற்பனை செய்துள்ளார். இரு மாவட்ட எல்லையும் சந்திக்கும் இடம் என்பதால் வருவாய்த்துறை, போலீசார் என இரு தரப்பினரையும் ஏமாற்ற தொடர்ந்து மணல் அள்ளியதாக தெரிகிறது.
சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வருவாய்துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தல் இருந்து நான்கு டாரஸ் லாரிகள், ஒரு அரைபாடி லாரி, பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications