சுவாதி வழக்கை போல பாஜக பிரமுகர் கொலை வழக்குகளில் போலீஸ் வேகம் காட்ட வேண்டும்: தமிழிசை
திருவள்ளூர்: பா.ஜ.க. பிரமுகர்கள் கொலை வழக்குகளில் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் காவல்துறை மெத்தனம் காட்டுகிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவள்ளூரில் மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநிலச் செயலாளர் அனு சந்திரமவுலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொருள் நிறுவன ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் கைது செய்தது பாராட்டுக்குரியது. ஆனாலும், மாநிலத்தில் பல்வேறு கொலை வழக்குகள் காவல்துறையால் கண்டு கொள்ளப்படாமலும், துப்பு துலக்கப்படாமலும் உள்ளன.
குறிப்பிடும் படியாக, பா.ஜ.க. பிரமுகர்கள் மற்றும் அதன் சகோதர இயக்கங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் தொடர்பான கொலை வழக்குகளில் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் தமிழக காவல்துறை மெத்தனம் காட்டி வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் காவல்துறையில் போதுமான காவலர்கள் இல்லை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளே.
எனவே, இது தொடர்பாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து, காவல்துறையை மேம்படுத்த வேண்டும். குற்றச்சம்பவங்கள் குறைய வேண்டும் என்றால், பள்ளிகளில் தினந்தோறும் நன்னெறி வகுப்புகளை நடத்த வேண்டும். அப்போது தான் குற்றச்சம்பவங்கள் குறையும். இது தொடர்பாக கல்வித்துறை முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணையின் உயரத்தை அதிகரித்து வரும் ஆந்திர அரசின் செயல் கண்டனத்திற்குரியது. இதற்குக் காரணம் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கும், முறையாகக் கண்காணிக்காததும் தான் என்று கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications