வார தொடக்கத்தில் வாக்குப்பதிவு.. தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் குறைய வாய்ப்பு?
சென்னை: விடுமுறை நாட்களை தொடர்ந்து தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால வாக்கு பதிவு சதவீதம் குறையும் வாய்ப்பிருப்பதாக பேச்சு எழுந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு, ஒரே கட்டமாக, மே 16ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம், திங்கள்கிழமையாகும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்துமே தேர்தல் நாளான திங்கள்கிழமையை, சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்துள்ளன.
இதில் ஒரு சிக்கல் உள்ளது. முந்தைய நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகியவை ஏற்கனவே விடுமுறை தினங்கள், வீக் என்ட்.

3 நாட்கள் லீவு
எனவே, வெள்ளிக்கிழமை மாலை அலுவலகம் முடிந்ததும், கோடை சுற்றுலாவுக்காக குடும்பத்தோடு பலரும் கிளம்பினால், நான்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையை அனுபவித்துவிட்டு, செவ்வாய்க்கிழமை காலை அலுவலகம் திரும்பினால் போதும் என்று நினைக்க வாய்ப்புள்ளது.

லீவுன்னா ஜாலிதான்
விடுமுறை தினத்தில் வாக்குப்பதிவை வைத்தால், வாக்களிக்க யாரும் வருவதில்லை என்பதை கண்கூடாக பல தேர்தல்களில் தேர்தல் ஆணையம் பார்த்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பெங்களூர் மாநகராட்சி தேர்தலின்போது கூட, நகர மக்களில் பெரும்பாலானோர், தியேட்டர், மால்களுக்கு செல்ல அன்றைய நாளை பயன்படுத்தினரே தவிர வாக்குப்பதிவு செய்ய செல்லவில்லை. எனவே வாக்குப்பதிவு குறைந்து காணப்பட்டது.

3 நாட்கள்
இந்த நிலையில், 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும் வகையில் ஒரு நாளை தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்திருப்பது வாக்கு பதிவை குறைத்துவிடும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது. தேர்தல் ஆணையம் கவனிக்காமல் இவ்வாறு தேதியை தேர்ந்தெடுத்துவிட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பாசிட்டிவா பாருங்க
இதுதொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியது: தேர்தல் தேதியை நெகட்டிவாக பார்க்காமல் பாசிட்டிவாகாவும் பார்க்கலாம். தொடர்ச்சியான இந்த விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி வெளியூரில் இருப்பவர்கள், சொந்த ஊருக்குப் போய் வாக்களிக்க ஒரு வாய்ப்பு அமைந்து இருப்பதாக நாம் கருத முடியும்.

விழிப்புணர்வு உள்ளது
ஒருவேளை வீக் என்ட்டில் சுற்றுலா செல்வோர் கூட திங்கள்கிழமை வீடு திரும்பி வாக்குப்பதிவு கடமையை நிறைவேற்றலாமே. மக்கள், தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்வதில் மக்கள் மிகவும் உறுதியாகவே இருக்கிறார்கள். வாக்குரிமை குறித்தும், வாக்களிப்பின் அவசியம் குறித்தும் இந்த முறை மிகப் பெரிய பிரசாரத்தை மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் ஒத்துழைப்புடன் செய்து முடித்துள்ளோம்.

வாரீர், வாரீர், வாக்களிக்க வாரீர்
தேர்தலுக்காகவே மே 16 அன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எனவே, அன்றைய தினம் யாரும் வாக்குச் செலுத்தாமல் இருந்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்போது, பல்வேறு விஷயங்களையும் கருத்தில் கொண்டுதான் செயல்பட்டு இருக்கும். விடுமுறை தினத்தையும் ஆணையம் கருத்தில் கொண்டிருக்கும். இவ்வாறு லக்கானி கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications