ஜல்லிக்கட்டு விவகாரத்தை பொறுமையாகத்தான் கையாள வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
காஞ்சிபுரம்: ஜல்லிக்கட்டு போட்டிகளை முற்றிலுமாக தடை செய்ய வாய்ப்பு உள்ளதால் இந்த விவகாரத்தை பொறுமையாகத்தான் கையாள வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி நடக்கவிருந்த ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டுக்கு தடை கிடைக்க தமிழகத்தில் உள்ள ஒருசில அமைப்புகளே காரணம் என்றும் இவர்களே ஜல்லிக்கட்டுக்கு ஒட்டுமொத்த தடை விதிக்க முயல்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், " ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையை அடுத்து இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் பேச நாளை தமிழக பாஜக குழு டெல்லி செல்ல முடிவெடுத்திருந்தோம். ஆனால் ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராம் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவாக கூறிவிட்டபடியால் இந்த பயணத்தை ரத்து செய்துள்ளோம் என்றார்.
ஜல்லிக்கட்டுக்கு முற்றிலுமாக தடை கிடைக்கவே வாய்ப்புள்ள நிலையில் நாம் இதில் அவசரப்பட்டு இருப்பதையும் இழந்துவிடக்கூடாது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் பொருமையாகத்தான் கையாள வேண்டும். தமிழக அரசின் நடவடிக்கையைப் பொறுத்து மத்திய அரசின் நடவடிக்கை இருக்கும் என்றார் பொன்.ராதகிருஷ்ணன்.
நாளை மறுதினம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டாவது நடைபெறுமா ? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடம் எழுந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications