ஜெயங்கொண்டம் அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலைமறியல்... போக்குவரத்து பாதிப்பு! - வீடியோ
ஜெயங்கொண்டம் அருகே குடியிருப்பு பகுதியில் இருக்கும் மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்: ஜெயங்கொண்டம் அருகே குடியிருப்பு பகுதியில் இருக்கும் மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம் அருகே உள்ளது கோடாலி கருப்பூர் கிராமம். இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அரசு மதுக்கடையை திறந்துள்ளது. இதனால் அப்பகுதி இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகும் ஆபத்து உருவாகியுள்ளது.
பொது மக்களுக்கு இடையூறாக உள்ள அந்த மதுக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் கும்பகோணம் - ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டாசியர் ஒரு வாரத்தில் மதுக்கடையை அகற்றப்படும் என உறுதியளித்தார்.
இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஒரு வாரத்தில் மதுக்கடையை அகற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்தனர
-
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications