புதுவையில் ஆசிரியர் வீட்டில் திருட்டு: தந்தை, 2 மகன்கள் கைது- 85 பவுன் நகைகள் மீட்பு
புதுவை: புதுவையில் ஆசிரியர் வீட்டில் நகை, பொருட்களை திருடிய தந்தை மற்றும் இரண்டு மகன்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 85 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுவை ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜகோபால்(46) என்ற தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சசிகலா(41) மின் துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 24-ந் தேதி இவர்களது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த நகைகள், வெள்ளி பொருட்கள், வைரநகைகள், விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் திருடப்பட்டு இருந்தன.
இது தொடர்பாக பெரியகடை போலீஸ் நிலையத்தில் ராஜகோபால் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வந்தனர். குற்றவாளிகளை பிடிக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஓம்வீர்சிங் உத்தரவின் பேரில் வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
அப்போது கொள்ளை நடந்த பகுதியில் உள்ள வீடுகள், கடைகளில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் 3 பேர் கொண்ட கும்பல் அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அடிக்கடி சுற்றி திரிந்தது தெரியவந்தது.
அதனடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அது புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்த முகமது யூசுப்(65), அவரது மகன்கள் மொய்தீன்(27), சாதிக் பாட்ஷா(24) என்பது கண்டுபிடிக்கப் பட்டது. மேலும் அவர்கள் மீது ரெட்டியார்பாளையம், கோரிமேடு காவல்நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் போலீசாருக்குத் தெரியவந்தது.
மேற்கொண்டு நடத்திய விசாரணையில், யூசுப் தனது மகன்களுடன் புதுவை என்ஜினீயரிங் காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார், குற்றவாளிகளைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் ஆசிரியர் ராஜகோபால் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டதோடு, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திருடியதாகவும் தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரிடம் இருந்து 85 பவுன் நகை, 1 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள், ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், விலை உயர்ந்த 7 பட்டுப்புடவைகள், ரூ.56 ஆயிரம் ரொக்க பணம், மோட்டார் சைக்கிள், 2 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications